தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் கிறிஸ்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
அவர்களுக்கு, பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடைப்படையில் கல்வி உதவித்தொகைக்கான புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு, பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடைப்படையில் கல்வி உதவித்தொகைக்கான புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.