கோவை மாவட்டத்தில் வீடற்ற ஏழை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
கோவை மாவட்டத்திலுள்ள வீடற்ற ஏழை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இத்திட்டத்தின் பயனை முழுமையாக பெறுவதற்கு தமிழக அரசு செயல் திட்டம் வகுத்துள்ளது.
மேலும், இத்திட்டத்தினை செயல்படுத்தும் நோக்கில் வீடற்ற ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் பொருட்டு அரசு நிர்ணியிக்கும் விலைக்கு நிலத்தை தர முன்வரும் நில உரிமையாளர்கள் மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டா கோரும் ஆதிதிராவிட இன மக்கள் நேரடியாக கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரை நேரில் அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
கோவை மாவட்டத்திலுள்ள வீடற்ற ஏழை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இத்திட்டத்தின் பயனை முழுமையாக பெறுவதற்கு தமிழக அரசு செயல் திட்டம் வகுத்துள்ளது.
மேலும், இத்திட்டத்தினை செயல்படுத்தும் நோக்கில் வீடற்ற ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் பொருட்டு அரசு நிர்ணியிக்கும் விலைக்கு நிலத்தை தர முன்வரும் நில உரிமையாளர்கள் மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டா கோரும் ஆதிதிராவிட இன மக்கள் நேரடியாக கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரை நேரில் அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.