சோமனூர் பேருந்து நிலைய விபத்து- உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் அறிவிப்பு

கோவை மாவட்டம், சோமனூர் பேருந்து நிலையத்தில் இன்று மேற்கூரை இடிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்திற்காக காத்திருந்த கிட்டாம்பளையம் பகுதியைச் சேர்ந்த துளசிமணி (50), தனியார் கல்லூரியில் பயிலும் சோமனூர் பகுதியைச் சேர்ந்த மாணவி தாரணி (21), காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி (40), அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கதக்க ஒரு ஆண் மற்றும் அரசு பேருந்து நடத்துனர் சிவக்குமார் (43) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைதொடர்ந்து விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.   

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...