கோவை மாவட்டம், சோமனூர் பேருந்து நிலையத்தில் இன்று மேற்கூரை இடிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்திற்காக காத்திருந்த கிட்டாம்பளையம் பகுதியைச் சேர்ந்த துளசிமணி (50), தனியார் கல்லூரியில் பயிலும் சோமனூர் பகுதியைச் சேர்ந்த மாணவி தாரணி (21), காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி (40), அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கதக்க ஒரு ஆண் மற்றும் அரசு பேருந்து நடத்துனர் சிவக்குமார் (43) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைதொடர்ந்து விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைதொடர்ந்து விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.