வலுக்கட்டாயமாக நீட் தேர்வை தினிக்கும் மத்திய அரசையும், அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மாநில அரசையும் கண்டித்து வெல்ஃபேர் பார்ட்டி அமைப்பின் சார்பில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இன்று நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் தற்கொலையை கொச்சையாகவும், தமிழின துரோக கருத்துக்களை வெளியிட்டு வரும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை கண்டித்தும் கோவை, குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணசாமியின் வீட்டை வெல்ஃபேர் பார்ட்டி மற்றும் பிரட்டர்னிட்டி இயக்கம் இணைந்து பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.

அப்போது, வெல்ஃபேர் பார்ட்டி மாநில பொது செயலாளர் முகமது காசிம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் மாணவர்களை கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசினால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்தை பற்றி கொச்சையாகவும், தமிழின துரோக கருத்துக்களை வெளியிட்டு வரும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மன்னிப்பு கேட்கும் வகையில் வெல்ஃபேர் பார்ட்டி மற்றும் பிரட்டர்னிட்டி இயக்கம் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும்.

இந்த நீட் தேர்வு தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டால் காலப்போக்கில் சுகாதாரம் என்பது முற்றிலும் அளிக்கப்படும். ஏழைகளுக்கான மருத்துவம் என்பது கேள்விக்குரியாகிவிடும். மேலும், கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் தலையீடு மாநிலங்களில் இல்லாமல் இருக்கும். தமிழக அரசு உடனடியாக அவசர சட்டத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். குடியரசுத் தலைவர் இதற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து இந்த நீட் தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்கை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்பதே வெல்ஃபேர் பார்ட்டி மற்றும் பிரட்டர்னிட்டி இயக்கத்தின் முக்கிய நோக்கம்' என்றார்.

இந்த போராட்டத்தில், எப்.ஐ.டி.யு மாநிலத் தலைவர் கோவை இப்ராஹிம், வெல்ஃபேர் பார்ட்டி மாவட்ட தலைவர் இ.எம்.எஸ், துணைத் தலைவர் ஷாஜஹான், பொருளாளர் முஜிப், எஸ்.ஐ.ஒ மாவட்டத் தலைவர் ஷபீர், வெல்ஃபேர் பார்ட்டி இணைச் செயலாளர் பீர் முகமது மற்றும் பெண்கள் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் 45 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்
அதன் ஒரு பகுதியாக, இன்று நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் தற்கொலையை கொச்சையாகவும், தமிழின துரோக கருத்துக்களை வெளியிட்டு வரும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை கண்டித்தும் கோவை, குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணசாமியின் வீட்டை வெல்ஃபேர் பார்ட்டி மற்றும் பிரட்டர்னிட்டி இயக்கம் இணைந்து பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.

அப்போது, வெல்ஃபேர் பார்ட்டி மாநில பொது செயலாளர் முகமது காசிம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் மாணவர்களை கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசினால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்தை பற்றி கொச்சையாகவும், தமிழின துரோக கருத்துக்களை வெளியிட்டு வரும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மன்னிப்பு கேட்கும் வகையில் வெல்ஃபேர் பார்ட்டி மற்றும் பிரட்டர்னிட்டி இயக்கம் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும்.

இந்த நீட் தேர்வு தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டால் காலப்போக்கில் சுகாதாரம் என்பது முற்றிலும் அளிக்கப்படும். ஏழைகளுக்கான மருத்துவம் என்பது கேள்விக்குரியாகிவிடும். மேலும், கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் தலையீடு மாநிலங்களில் இல்லாமல் இருக்கும். தமிழக அரசு உடனடியாக அவசர சட்டத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். குடியரசுத் தலைவர் இதற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து இந்த நீட் தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்கை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்பதே வெல்ஃபேர் பார்ட்டி மற்றும் பிரட்டர்னிட்டி இயக்கத்தின் முக்கிய நோக்கம்' என்றார்.

இந்த போராட்டத்தில், எப்.ஐ.டி.யு மாநிலத் தலைவர் கோவை இப்ராஹிம், வெல்ஃபேர் பார்ட்டி மாவட்ட தலைவர் இ.எம்.எஸ், துணைத் தலைவர் ஷாஜஹான், பொருளாளர் முஜிப், எஸ்.ஐ.ஒ மாவட்டத் தலைவர் ஷபீர், வெல்ஃபேர் பார்ட்டி இணைச் செயலாளர் பீர் முகமது மற்றும் பெண்கள் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் 45 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்