மாநில அளவிலான குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின சதுரங்கப் போட்டி துவக்கம்


மாநில அளவிலான குடியரசுத் தின மற்றும் பாரதியார் தின சதுரங்கப் போட்டியை சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி. வி.ஜெயராமன் துவக்கிவைத்தார். 

கோவை மாவட்டம் அரசம்பாளையம், எஸ்.வி.எஸ்.பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் இன்று மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின சதுரங்கப் போட்டி துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் கலந்துகொண்டு சதுரங்கப்போட்டியை துவக்கிவைத்தார்.



இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் உள்ள 7 முதல் 19 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் பள்ளி, குறுமையம், மாவட்ட மற்றும் மண்டல அளவு என ஒவ்வொரு நிலையிலும் வெற்றி பெற்றவர் 360 பேர் மாநில அளவில் நடைபெறுகிற போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

11, 14, 17 மற்றும் 19 வயதுக்கு கீழ் என உள்ள 4 பிரிவுகளில் சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, வேலூர் மற்றும் விளையாட்டு விடுதி என 15 மண்டலங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் இப்போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித்திட்டம்) செல்வகுமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் வனஜா, நசாரூதின், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (பொ) கீதா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...