கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜேஷ்வரி நகரில் வசித்து வந்த பிரபல பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ், அவரது வீட்டு முன்பு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனமும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷிற்கு, கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு முற்போக்கு அமைப்புகள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பகுத்தறிவாளரான கவுரி லங்கேஷ், சங் பரிவார் அமைப்புகளினால் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், கொலை குற்றவாளிகளை காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷிற்கு, கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு முற்போக்கு அமைப்புகள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பகுத்தறிவாளரான கவுரி லங்கேஷ், சங் பரிவார் அமைப்புகளினால் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், கொலை குற்றவாளிகளை காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.