கவுரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து கோவையில் அனைத்து பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

எழுத்தாளரும், லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியருமான கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இவர் இடது சாரி சிந்தனையாளர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவர். சமூக அவலங்கள் குறித்து எழுதிய லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



அதன்படி, கோவையில் இன்று மாலை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது, மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான சட்டங்கள் இயற்றக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.



தொடர்ந்து, செய்தியாளர்களிடையே தீக்கதிர் நாளிதழ் கோவை பதிப்பின் ஆசிரியர் கண்ணன் பேசுகையில், 'மதச்சார்பற்ற கருத்துக்களை தொடர்ந்து எழுதி வந்த கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டது கண்டனத்திற்கு உரியது. அவர் விட்டுச்சென்ற பேனாவை மற்ற பத்திரிகையாளர்கள் தாங்கிப்பிடிப்பார்கள்.

வகுப்புவாதம் பேசுபவர்கள் கருத்தியல் ரீதியாக மோதாமல், ஆயுதங்களை கொண்டு கொலை செய்வது ஏற்க முடியாத ஒன்று. இந்த அச்சுறுத்தல்களுக்கு முற்போக்கு எழுத்துக்கள் என்றும் அடிபணியாது. எங்கள் பேனாவை வலிமையான ஆயுதமாக எடுத்து தொடர்ந்து மதவெறிக்கு எதிரான கருத்துக்களை எழுதுவோம்' என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...