நீட் பிரச்சனை: இரண்டாம் நாளாக கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மருத்துவ படிப்பிற்கு தகுதித் தேர்வான நீட் தேர்வினால் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அரியலூர் மாணவி அனிதா உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து, கடந்த செவ்வாயன்று (நேற்று) தமிழகம் முழுவதும் பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மாபெரும் அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பினை கேள்விக்குறியாக்கும் வகையிலான நீட் தேர்வு முறையினை ரத்து செய்ய வேண்டும். மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டும். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொருப்பேற்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்வினை உடடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் செவ்வாயன்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் (புதன் கிழமை) தொடர்ந்து அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி முதல்வரின் அனுமதியின்றி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியும் அவர்கள் ஏற்க மறுத்து போராட்டத்தினை தொடர்ந்தனர்.



இறுதியில், கல்லூரி முதல்வர் மற்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டதன் பேரில் இரண்டு நிமிடங்கள் அஞ்சலிக்குப் பிறகு மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...