கோவையில் டிரிப் பேக்டரியின் முதலாவது விடுமுறை அங்காடி துவக்கம்

பயணம் செய்வோருக்கான புதிய அனுபவத்தை தரும் வகையில் கோவையில் முதலாவது விடுமுறை அங்காடியை டிரிப் பேக்டரி துவங்கியுள்ளது. இதனை நடிகர் மற்றும் இயக்குநருமான பாக்யராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நடிகை பூர்ணிமா பாக்யராஜ் குத்துவிளக்கேற்றினார்.



இதனைத்தொடர்ந்து, முதல் சுற்றுலா பயணத்திற்கான டிக்கெட்யை ஸ்ரீ அண்ணப்பூர்ணா ஸ்ரீனிவாசன் வெளியிட்டார். இந்நிறுவனம் ஏற்கனவே, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் துவங்கி, தற்போது கோவையிலும் அடியெடுத்து வைத்துள்ளது.



பெரும்பாலான பயணிகள் தங்களது விடுமுறை சுற்றுலா பயணத்தேவைக்கு நேரடியாக ஏஜெண்டுகளை தேடுகின்றனர். அல்லது நேரடியாக புக்கிங் செய்கின்றனர். ஆன்லைனில் 18 சதவிகிதம் பேர் மட்டுமே பதிவு செய்கின்றனர். எனவே, பயணம் செய்வோருக்கான அனைத்து தேவைகளும் டிரிப் பேக்டரியின் மூலம் கிடைக்க கோவையில் இந்நிறுவனம் துவங்கியுள்ளது.



இது குறித்து டிரிப் பேக்டரியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் அமித் அகர்வால் கூறுகையில், "விடுமுறையில் உள்நாட்டுப் பயணம், வெளிநாட்டுப் பயணம் அவரவர் விரும்பும் விதத்தில் அமைய தேவையான அனைத்து தொழிநுட்ப வசதிகளையும் டிரிப் பேக்டரி ஹாலிடே ஸ்டார் கொண்டுள்ளது. எங்களது தொடர்பில் உள்ள சப்ளையர், ஏர்லைன் பங்குதாரர்கள் சிறப்பான விலையை அளிப்பதால் வாடிக்கையாளர்களுக்கு குறைவான செலவு தான் ஏற்படுகிறது" என்றார்.

டிரிப் பேக்டரி நிறுவனர் வினாய் குப்தா பேசுகையில், "ஒவ்வொரு விடுமுறை பயணிகளையும் 2020-ம் ஆண்டுக்குள் சென்றடைய வேண்டும் என்பதே டிரிப் பேக்டரியின் திட்டம். பயணிகளுக்கு விரைவான சேவை, அருமையான அனுபவங்களை ஈடுஇணையற்ற வகையில் தர வேண்டும். டிரிப் பேக்டரியில் நுழைவோர் சில நிமிடங்களில் சுற்றுலா திட்டத்தை பெற முடியும். முழுமையான விடுமுறை சுற்றுலா அனுபவம் பல மடங்கு உயர்ந்ததாக அவர்களுக்கு தெரியும்" என்றார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...