நீலகிரி மாவட்டத்தில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாளுவது குறித்த விழிப்புணர்வு முகாம் - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை வட்டம் மீக்கேரி கிராமத்தில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நேற்று (செப்.,5) தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா இதனை தொடங்கி வைத்தார்.

பின்னர், முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பேசுகையில்,  நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறி பயிர்கள், பழங்கள், வாசனை திரவிய பயிர்கள், மலர்கள், மூலிகை பயிர்கள் என அனைத்து வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. 

உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளை நேரடி உணவாக உட்கொள்வதால், மருந்துகளில் உள்ள இரசாயன பொருட்களின் நச்சுத்தன்மை மனிதர்களுக்கு பல நோய்களை உருவாக்குகின்றன. எனவே, விவசாயிகள் சாகுபடி செய்யும் காய்கறி மற்றும் பழங்களில் அதிக நச்சுத்தன்மை கொண்ட இரசாயன கொல்லிகள், அதிக அளவிலான உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையாக தயாரிக்கப்படும் உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து மகசூலை பெருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், விவசாயிகளுக்கு மண்வள அட்டை மற்றும் பாதுகாப்பு கவசங்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை வட்டத்தில் வரும் 07-ம் தேதி குந்தசப்பை பகுதியிலும், 14-ம் தேதி பிக்கட்டி பகுதியிலும், 19-ம் தேதி சோலூர் பகுதியிலும், 21-ம் தேதி இத்தலார் பகுதியிலும், 26- ம் தேதி கடநாடு பகுதிகளிலும்,  குன்னூர் வட்டத்தில் 13-ம் தேதி பிக்கோல் பகுதியிலும், 15-ம் தேதி கெரடா பகுதியிலும், கோத்தகிரி வட்டத்தில் 06-ம் தேதி கூக்கல் பகுதியிலும், 07-ம் தேதி தேனாடு  பகுதியிலும், கூடலூர் வட்டத்தில் 07-ம் தேதி  மாங்குழி பகுதியிலும், 13-ம் தேதி தஞ்ஜோரா பகுதியிலும் விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. 

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் (கோவை) இல.பெருமாள் தோட்டக்கலை துணை இயக்குநர் ஜி.கே.உமாராணி, தோட்டக்கலை உதவி இயக்குநர் டி.ஜெ.மீராபாய் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...