நீட் தேர்வு விவகாரம் - சமூக வலைதளங்களில் வைரலாகும் ஜெயலலிதா கடிதம்

கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. 

ஆனால், ஓராண்டுக்கு மட்டுமே விலக்கு அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், மருத்துவப் படிப்பிற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இது, தமிழக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 





அதில், மத்திய அரசிடம் ஜெயலலிதா வலியுறுத்தியிருப்பதாவது:-  மருத்துவப் படிப்பிற்கான மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். 

நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் செயல். நீட் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தினால், கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கு போதிய பயிற்சி மையம் இல்லை. அவ்வாறு இருந்தால், அதில் பயன்பெறக் கூடிய வசதியில்லாதவர்களாக உள்ளனர். 

சமூக - பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்காகவே, தமிழக அரசின் சார்பில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், தொலைதூரக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே, தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில், மாற்றம் செய்யக் கூடாது. எதிர்காலத்திலும், நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டுவர அனுமதிக்கக் கூடாது. 

இவ்வாறு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா,  பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது. 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...