ஆர்எஸ்.புரம் சாலையில் வேருடன் விழுந்த ராட்சத மரம்

கோவையில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று அதிகாலை முதலே, மாநகரின் சில பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. சில பகுதிகளில் பிற்பகல் முதல் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படத்துடன் மேகமும் கருமேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், கோவை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு கடும் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் கொட்டிய கனமழையால், மாநகர சாலைகள் வெள்ளக்காடாக மாறின.



சில பகுதிகளில் பழமையான சுவர்களும், மரங்களும் விழுந்தன. இரவு நேரம் நிகழ்ந்த இச்சம்பவத்தால் பெரும் அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டன. 

இதனிடையே, ஆர்.எஸ்.புரம், டி.பி சாலையில் ஏராளமான பழமையான நாட்டு மரங்கள் உள்ள நிலையில் மழையின் காரணமாக மண் தளர்ந்திருந்ததால் இன்று பிற்பகல் பெரிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே வேருடன் முறிந்து விழுந்தது.



ராஜஸ்தானி அரங்கத்தின் எதிரே, காந்திபார்க்- ஆர்.எஸ்.புரத்தினை இணைக்கும் இந்த முக்கியச் சாலையில் மரம் விழுந்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.



கோவை நகரத்தின் முக்கிய பகுதியான, போக்குவரத்து மிகுந்த ஆர்.எஸ்.புரத்தில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து நீண்ட நேரம் கடந்தும் தொடர்புடைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனவும், விரைந்து மரத்தினை அகற்றி போக்குவரத்தினை சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...