நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் இன்று வால்பாறையில் செயல்பட்டு வரும் பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, நீட் தேர்வினால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், மாணவி அனிதாவின் உயிரிழப்பிற்கு மத்திய அரசும், மாநில அரசுமே காரணம். மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோதத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. ஏழை மாணவ, மாணவியர்களின் கல்வியினை கேள்விக்குறியாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று முழக்கமிட்டனர்.
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வட்டாட்சியர் குணசேகரன் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

முன்னதாக, நீட் தேர்வினால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், மாணவி அனிதாவின் உயிரிழப்பிற்கு மத்திய அரசும், மாநில அரசுமே காரணம். மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோதத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. ஏழை மாணவ, மாணவியர்களின் கல்வியினை கேள்விக்குறியாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று முழக்கமிட்டனர்.
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வட்டாட்சியர் குணசேகரன் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.