நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பு சேர முடியாமல் விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட அரயலூர் மாவட்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, நீட் தேர்வைக் கண்டித்தும், இதுபோன்ற மக்கள் விரோத சட்டங்களை தொடர்ந்து இயற்றிவரும் மத்திய, மாநில அரசுகளின் போக்கைக் கண்டித்தும் இன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு தேமுதிக மற்றும் ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசியல் கட்சியினரைத் தவிர பெண்கள், சிறுவர்கள் என அனைத்துத் தரப்பினரும் இணைந்து மத்திய, மாநில அரசுக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
