உத்தரபிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஒரே மாதத்தில் 49 குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

உத்தரபிரதேசத்தில் மாநிலம் கோரக்பூரில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த ஆகஸ்ட் 11 ம் தேதி 60 க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. நாட்டையே அதிர்ச்சியிலும், சோகத்திலும் உறைய வைத்த இந்த சம்பவத்தில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் அங்கு நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஃபரூகாபாத் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரே மாதத்தில் 49 குழந்தைகள் பலியாகி உள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 30 குழந்தைகள், பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் பகுதியில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாகவும், 19 குழந்தைகள் பிரசவத்தின் போது அல்லது பிரசவத்திற்கு சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளன.



இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை உயர் அதிகாரிகள் மீது உத்தரபிரதேச அரசு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிலளிக்க மாவட்ட நீதிபதி ரவீந்திர குமாரும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு 19 நோட்டீஸ் அனுப்பி உள்ளார். போதிய வளர்ச்சி இன்றி பிறந்தது, மிக குறைந்த எடையுடன் பிறந்ததே குழந்தைகளின் இறப்பிற்கு காரணம் என பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் பிரிவின் பொறுப்பாளர் டாக்டர் கைலாஷ் குமார் தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து வெளிவரும் பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புக்கள் குறித்த தகவல்கள், மக்களை அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தி உள்ளது. இது போன்ற தொடர் சம்பவங்களுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் எனவும் சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தியுள்ளது.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...