நீலகிரி மாவட்டம், உதகை, கோடப்பமந்து கால்வாயினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டம், உதகையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் குப்பைகளுடன் மழைநீர் கோடப்பமந்து கால்வாயில் வழிந்தோடியதால், ஆங்காங்கே குப்பைக் கழிவுகள் தேங்கியுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.

இந்நிகழ்வின் போது, உதகை ஏரியினை வந்தடையும் கோடப்பமந்து கால்வாயில் கனமழை பெய்யும்பொழுது ஏற்படும் வெள்ளநீர் தேங்காமால் சென்றடையவும், உதகை ரயில் நிலைய சாலையில் மழைநீர் தேங்காமல் வழிந்தோட உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதேபோல மத்திய பேருந்து நிலைய கால்வாய்களில் மழைநீர் தேங்காமல் முறையாக கோடப்பமந்து கால்வாயில் சென்றடைய உடனுக்குடன் குப்பைகளை அப்புறப்படுத்தி சீர்செய்யுமாறும், உதகை ஏரிக்கு கோடப்பமந்து கால்வாய் மூலம் வந்தடையும் மழைநீரில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் உடனுக்குடன் பார்த்துக்கொள்ளுமாறும் நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் (ம) ஆணையாளர் (பொ), மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம், உதகையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் குப்பைகளுடன் மழைநீர் கோடப்பமந்து கால்வாயில் வழிந்தோடியதால், ஆங்காங்கே குப்பைக் கழிவுகள் தேங்கியுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.

இந்நிகழ்வின் போது, உதகை ஏரியினை வந்தடையும் கோடப்பமந்து கால்வாயில் கனமழை பெய்யும்பொழுது ஏற்படும் வெள்ளநீர் தேங்காமால் சென்றடையவும், உதகை ரயில் நிலைய சாலையில் மழைநீர் தேங்காமல் வழிந்தோட உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதேபோல மத்திய பேருந்து நிலைய கால்வாய்களில் மழைநீர் தேங்காமல் முறையாக கோடப்பமந்து கால்வாயில் சென்றடைய உடனுக்குடன் குப்பைகளை அப்புறப்படுத்தி சீர்செய்யுமாறும், உதகை ஏரிக்கு கோடப்பமந்து கால்வாய் மூலம் வந்தடையும் மழைநீரில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் உடனுக்குடன் பார்த்துக்கொள்ளுமாறும் நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் (ம) ஆணையாளர் (பொ), மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.