வால்பாறையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) பெய்த கன மழை காரணமாக பொள்ளாச்சி- வால்பாறை சாலையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், சில இடங்களில் மலையோரங்களில் உள்ள வீடுகளும் பலத்த மழையின் காரணமாக சரியும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வால்பாறையில் கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள இந்த மண் சரிவினால் வால்பாறை மற்றும் பொள்ளாச்சி செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) பெய்த கன மழை காரணமாக பொள்ளாச்சி- வால்பாறை சாலையில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், சில இடங்களில் மலையோரங்களில் உள்ள வீடுகளும் பலத்த மழையின் காரணமாக சரியும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வால்பாறையில் கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள இந்த மண் சரிவினால் வால்பாறை மற்றும் பொள்ளாச்சி செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
