கோவை குரங்கு அருவியில் திடீர் வெள்ளம்- சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்



ஆழியாறு அடுத்துள்ள குரங்கு அருவியில் நேற்று (செப்டம்பர் 2) மாலை திடீரென்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால், அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் விரைவாக வெளியேற்றினர். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் அழியார் அடுத்து அமைந்துள்ளது குரங்கு அருவி. கோவையில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். வார இறுதி நாட்களில் இளைஞர்கள், பொதுமக்கள் என குரங்கு அருவி பரபரப்பாக காணப்படும். 

சில மாதங்களாக வறட்சியின் காரணமாக நீர்வரத்து இன்றி காணப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்திருந்த நிலையில், கடந்த ஒருவார காலமாக வால்பாறையில் மழை பெய்து வருவதைத் தொடர்ந்து குரங்கு அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த சனிக்கிழமையன்று அதிகளவில் காணப்பட்டது.

இதனிடையே, வால்பாறை பகுதியில் உள்ள சக்தி எஸ்டேட், தலநார் எஸ்டேட் பகுதிகளில் பெய்த மழையால், சேத்துபாறை ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குரங்கு அருவியில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் திடீரென்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

அருவியில் கொட்டிய தண்ணீரின் நிறம் மாறியதைக் கண்ட வனத்துறையினர், விரைந்து செயல்பட்டு அங்கு குளித்துக்கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகளை வெளியேற்ற தொடங்கினர். சிறிது நேரத்தில் அருவியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கம்பியை தாண்டி காட்டாற்று வெள்ளம் கொட்டத் துவங்கியது.

மேலும், இந்த வெள்ளத்தில் முட்கள், சிறு மரக்கிளைகள் போன்றவை அடித்து வரப்பட்டன. இதையடுத்து வனத்துறையினர் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதித்தனர். வனத்துறையினரின் இந்த விரைவு நடவடிக்கையால் பெரியளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...