தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் மாணவி அனிதா தற்கொலை - கோவை வ.உ.சி. மைதானத்தில் போலீஸார் குவிப்பு

நீட் தேர்வால் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காததால் மனமுடைந்த அரியலூர் மாணவி அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டதே மாணவியின் தற்கொலைக்கு காரணம் எனக் கூறி தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அரியலூர் மாணவி அனிதா தற்கொலையால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்தப்போவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வ.உ.சி. மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடுப்புகளை அமைத்து, மாணவர்கள் யாரையும் அனுமதிக்காதவாறு, போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். ரோந்து வாகனங்களிலும் போலீஸார், தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதேபோல,  தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர், திராவிடக் கழகத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சியினர் கோவை ரயில் நிலையத்தில் சென்னை - மங்களூர் விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால். ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த போலீஸார்,  சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  கைது செய்து, ரயில் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். 



அப்போது, 3 கட்சியினரும் சாலையில் அமர்ந்து, நீட் தேர்வுக்கு அனுமதிளித்த மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.  மேலும், தமிழகத்தை விட்டு ஆர்,எஸ்.எஸ் அமைப்பு வெளியேற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...