ஓட்டுனர் உரிமம் தொலைந்துவிட்டால் என்ன செய்வது: வட்டார போக்குவரத்து அதிகாரி விளக்கம்

தமிழகத்தில் உள்ள வாகன ஓட்டிகள் அனைவரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அசல்  ஓட்டுனர் உரிமம் வைத்துக்கொண்டு தான் வாகனம் ஓட்டவேண்டும், மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் உதரவிட்டிருந்தார். 

இந்நிலையில், இந்த அறிவிப்பிற்கு எதிரிப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மேலும், லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி துரைசாமி, தமிழக அரசின் அசல் ஓட்டுநர் உரிமம் திட்டத்தை ரத்து செய்தார்.

இதனிடையே, ஒருசிலர் அசல் ஓட்டுனர் உரிமத்தை தவறவிட்டு, நகலினை பயன்படுத்தி வருவர். அவ்வாறாக தவறவிட்ட அசல் ஓட்டுனர் உரிமத்தை எப்படி பெறுவது ? என்பது குறித்து கோவை (மத்திய) வட்டார போக்குவரத்து  அலுவலர் உதயகுமார் சிம்ப்ளிசிட்டி-யிடம் கூறியதாவது:- 

ஒருவரின் அசல் ஓட்டுனர் உரிமம் தொலைந்துவிட்டால் அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்தபின்னர், அதற்கான சான்றிதழை சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர் தான் மீண்டும் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். 

தற்போது, ஓட்டுனர் உரிமம் தொலைந்துவிட்டால்  காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க வேண்டியது இல்லை. இணையதளம் வழியாக புகார் அளித்து அதற்கான சான்றிதழையும் பெற முடியும். அந்த சான்றிதழை அந்தந்த பகுதி வட்டாரப்போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைப்பதன் மூலம் மீண்டும் ஓட்டுனர் உரிமத்தை பெற முடியும். 

இவ்வாறு அவர் கூறினார். 

அசல் ஓட்டுனர் உரிமம், ஆர்.சி.புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனால் காவல்துறையினரின் இணைய சேவை மூலமாக புகார் அளிக்கும் வசதியை இன்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஷ்வநாதன் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...