சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய அளவிலான கட்டுரை, குறும்பட போட்டி- மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் பொது மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு தேசிய அளவிலான கட்டுரை மற்றும் குறும்பட போட்டிகள் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் பொது மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு தேசிய அளவிலான கட்டுரை மற்றும் குறும்பட போட்டி மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் செப்டம்பர் 5 அன்று 10.30 மணி முதல் 1 மணி வரை கீழ்காணும் தலைப்புகளில் நடைபெறுகிறது.

“தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கு என்னால் இயன்றவை என்ன?” என்ற தலைப்பில் (250 வார்த்தைகளுக்கு மிகாமல்) கட்டுரை போட்டியும், “தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கு எனது பங்களிப்பு” பற்றிய (2 அல்லது 3 நிமிடங்கள்) குறும்படம் போட்டியும் நடைபெறவுள்ளது.

இப்போட்டிகள் பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள், பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள், அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள், மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

ஊராட்சி அளவில் போட்டிகளை நடத்தி அவற்றில் சிறந்த கட்டுரை மற்றும் குறும்படத்தினை (தலா 1 அல்லது 2 வீதம்) ஊராட்சி அளவிலான குழு தேர்வு செய்யும்.

அவற்றில் வட்டார அளவில் சிறந்த கட்டுரை மற்றும் குறும்படத்தினை (தலா 3 வீதம்) வட்டார அளவிலான குழு தேர்வு செய்யும். மாவட்ட அளவில் சிறந்த கட்டுரை மற்றும் குறும்படத்தினை (தலா 3 வீதம்) மாவட்ட அளவிலான குழு தேர்வு செய்யும்.

மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கட்டுரை மற்றும் குறும்படங்கள் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும். போட்டிக்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி செயலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...