கோவையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கான பணி துரிதமாக நடைபெற்று வரும் வேளையில், நகரத்தை ஸ்மார்ட் சிட்டியாக்குவதில் உள்ள சாதகம் மற்றும் பாதகங்களை ஆய்வு செய்யும் வகையில் டில்லி கட்டிடக்கலை மற்றும் திட்ட மேலாண்மை கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கோவை வந்துள்ளனர்.
நகர திட்டமைப்புத் துறையின் பேராசிரியருடன் கோவை வந்த 32 மாணவர்கள் 5 குழுக்களாக பிரிந்து இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். தொடர்ந்து, 15 நாட்கள் உள்ளூர் திட்டக் குழுமத்துடன் இணைந்து ஆய்வு நடத்தி திட்ட அறிக்கையை மாணவர்கள் சமர்ப்பிக்கின்றனர்.
மேலும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் தலை சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்தில் சேமிப்புக்கிடங்கு அமைப்பது குறித்தும், வெள்ளலூர் குப்பைக்கிடங்கை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
நகர திட்டமைப்புத் துறையின் பேராசிரியருடன் கோவை வந்த 32 மாணவர்கள் 5 குழுக்களாக பிரிந்து இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். தொடர்ந்து, 15 நாட்கள் உள்ளூர் திட்டக் குழுமத்துடன் இணைந்து ஆய்வு நடத்தி திட்ட அறிக்கையை மாணவர்கள் சமர்ப்பிக்கின்றனர்.
மேலும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் தலை சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்தில் சேமிப்புக்கிடங்கு அமைப்பது குறித்தும், வெள்ளலூர் குப்பைக்கிடங்கை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.