கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைவு படுத்த கோரியும் பாலத்தின் அளவை குறைக்கும் நடவடிக்கையினை கைவிடக்கோரியும் அப்பகுதி மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை ஆவாரம்பாளையம் - கணபதி பகுதியில் உள்ள ரயில்வே பாதையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடந்து நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சர்வீஸ் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக காலதாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், அப்பகுதியில் அமைக்கப்பட இருக்கும் பாலத்தின் அளவை குறைக்க நெடுஞ்சாலைதுறை முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகின்றது. இதை கண்டித்து கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மேம்பால பணிகளை விரைந்து துவங்க வேண்டும் எனவும், பாலத்தின் அளவை குறைக்கும் நடவடிக்கையினை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் கலந்து கொண்டார்.
கோவை ஆவாரம்பாளையம் - கணபதி பகுதியில் உள்ள ரயில்வே பாதையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடந்து நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சர்வீஸ் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக காலதாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், அப்பகுதியில் அமைக்கப்பட இருக்கும் பாலத்தின் அளவை குறைக்க நெடுஞ்சாலைதுறை முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகின்றது. இதை கண்டித்து கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மேம்பால பணிகளை விரைந்து துவங்க வேண்டும் எனவும், பாலத்தின் அளவை குறைக்கும் நடவடிக்கையினை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் கலந்து கொண்டார்.