தமிழக அரசால் தொண்டாமுத்தூரில் புதிய பாரதியார் பல்கலைக்கழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டதற்கு மாணவ, மாணவிகள் தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் 70 ஆண்டுகால எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இருபாலர் பயிலும் புதிய பாரதியார் பல்கலைக்கழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை கடந்த ஆகஸ்ட் 6ம் தேதியன்று திறந்துவைத்தார்.

மேலும், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் பாரதியார் பல்கலைக்கழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டுப்பாளையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், கோவை ஆர்.எஸ்.புரத்தில் அன்னைதெரசா மகளிர் கல்லூரியும் என கடந்த ஓராண்டில் கோவை மாவட்டத்திற்கு மட்டும் 4 கல்லூரிகள் மற்றும் பல்லடம் பகுதியில் ஒரு கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த கல்வியாண்டில் இக்கல்லூரிகளானது புதிய கட்டிடத்திற்கு புதிய பொழிவுடன் மாற்றப்பட்டு கூடுதல் பாடப்பிரிவுகளை சேர்த்து, இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, கோவை தொண்டாமுத்தூரில் அமைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தமிழக அரசிற்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் 70 ஆண்டுகால எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இருபாலர் பயிலும் புதிய பாரதியார் பல்கலைக்கழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை கடந்த ஆகஸ்ட் 6ம் தேதியன்று திறந்துவைத்தார்.

மேலும், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் பாரதியார் பல்கலைக்கழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டுப்பாளையத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், கோவை ஆர்.எஸ்.புரத்தில் அன்னைதெரசா மகளிர் கல்லூரியும் என கடந்த ஓராண்டில் கோவை மாவட்டத்திற்கு மட்டும் 4 கல்லூரிகள் மற்றும் பல்லடம் பகுதியில் ஒரு கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த கல்வியாண்டில் இக்கல்லூரிகளானது புதிய கட்டிடத்திற்கு புதிய பொழிவுடன் மாற்றப்பட்டு கூடுதல் பாடப்பிரிவுகளை சேர்த்து, இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, கோவை தொண்டாமுத்தூரில் அமைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தமிழக அரசிற்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.