அதிமுக அணியில் சேர்க்கவில்லை என்றால் பல ரகசியங்கள் வெளியிடப்படும்- தினகரன் அணி நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

அதிமுகவில் மூன்று அணிகளும் ஒன்று சேரவில்லை என்றால் பல ரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கும் எனவும் ரகசியங்களை வெளியிட்டால் தனது உயிருக்கே பாதுகாப்பு இருக்காது என கோவை டி.டி.வி.தினகரன் ஆதரவு அணி நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜ் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் எச்சரிக்கை விடுத்தார்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜின் கார், பீளமேடு அருகே இன்று காலை அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. காரில் அவரது மகன் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த எம்.பி.நாகராஜ், விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் விபத்து குறித்து கார் ஓட்டுனர் மற்றும் காவல் துறையினரிடம் கேட்டறிந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.



அப்போது அவர் கூறியதாவது:- "அதிமுகவில் அணிகள் என்று கிடையாது. கருத்து வேறுபாடுகளால் மட்டுமே பிரிந்து இருக்கின்றோம். அனைத்து தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும். 

ஜெயா டி.வி-க்கான பணிகளை 5 ஆண்டுகளாக தான் கவனித்து வந்தேன். அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அனைவரும் இணைய வேண்டும் என்பதற்காகவே தன்னைப் போன்றவர்கள் அமைதியாக இருக்கிறோம். ஆனால் தங்களை ஒதுக்கி வைத்து விட்டு செயல்படுகின்றனர்.

மூன்று பேரும் ஒன்று சேரவில்லை என்றால் பல ரகசியங்களை வெளியிட வேண்டியிருக்கும். ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கில் கூட்டு சதி என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கிற்காகவே சசிகலா சில காலம் விலக்கி வைக்கப்பட்டு இருந்தார். டி.டி.வி. தினகரன் கட்சிக்காகவே சிறைக்கு சென்றார். சசிகலாவிடம் கட்சி பதவிக்காக சென்று நிற்காதவர் என எவருமே கிடையாது. பல உண்மைகளை வெளியிட்டால் தனது உயிருக்கே பாதுகாப்பு இருக்காது. கூட்டணிகளை கூட இறுதி செய்தது சசிக்கலாதான். 

அதிமுக-வுடன் கூட்டணி வைத்த கட்சித்தலைவர்கள் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சீட்டுகளை முடிவுசெய்தனர் என்பதை தெரிவிக்க வேண்டும். இன்று நடந்த இந்த விபத்து இயற்கையாக நடந்ததாக இருக்கலாம் அல்லது தன்னை அச்சுறுத்துவதற்காக நடத்தப்பட்டதாகக் கூட இருக்கலாம்" என நாகராஜன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...