டி.டி.வி.தினகரன் பயத்தால் அதிமுகவினரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குகிறார்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி



ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

"மாவட்ட செயலாளர் பதவிக்கு முறையாக வந்தவர்கள் நாங்கள். டி.டி.வி.தினகரனுக்கு வந்துள்ள பயத்தால் அமைச்சர்களையும், அதிமுக-வில் பொறுப்பில் உள்ளவர்களையும் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி வருகிறார். 

தேர்தல் கமிஷன் அறிவிப்பிக்கு பிறகு தான் கட்சி அதிகாரம் யாருக்கு உள்ளது என்று தெரியவரும். தற்போது நடைபெற்ற கூட்டத்தில் சசிகலா குறித்து எதுவும் பேசவில்லை. பொதுவான விஷயங்கள் குறித்துதான் பேசப்பட்டது. 

இரட்டை இலையை மீட்கும் நடவடிக்கையில் மூத்த அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். சின்னம் விரைவில் மீட்கப்படும். எம்எல்ஏக்கள் இடையே பேரம் எதுவும் நடக்கவில்லை. கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகியோர் தனி அமைப்பு நடத்துவதால் அவர்களுடைய நிலைப்பாட்டை அவர்கள் தான் அறிவிக்க வேண்டும். தற்போது தேர்தல் நடந்தால் வாக்களிக்க மக்களும் தயாராக இல்லை, எம்.எல்.ஏ-க்களும் தயாராக இல்லை. அடிக்கடி வாக்களிக்க யாரும் விரும்பமாட்டார்கள்" என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...