ரயில்பயணிகள் ரயில்பயணத்தின் போது தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதையும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்வதை தடுக்கவும், தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் திடீர் பயணச்சீட்டு பரிசோதனை போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
கடந்த வார இறுதியில் தொடர்ந்து 3 விடுமுறை நாட்கள் வருவதால் ரயில்களில் அதிக கூட்டம் இருப்பதால் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதை உத்தேசித்து சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஏ.விஜுவின் தலைமையில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் 41 ரயில்களில், 46 வணிகவியல் பிரிவு ஊழியர்கள், 11 ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் கொண்ட ஒரு குழு, 26.08,2017 நள்ளிரவு 12 மணி முதல் 27.08,2017 நள்ளிரவு 12 மணி வரை 24 மணிநேரத்திற்கு சிறப்பு பயணச்சீட்டு பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதில் 4,69,342 ரூபாய் பயணச்சீட்டு தொகை மற்றும் அபராதமாக 1089 பேர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது. இதுவே சேலம் கோட்டத்தில் ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட பயணச்சீட்டு சோதனையில் வசூலிக்கப்பட்ட அதிக பட்ச தொகையாகும். இதற்கு முன்னதாக 02.04.2017 அன்று நடத்தப்பட்ட இது போன்ற ஒரு சோதனையின் போது 3,37,595 ரூபாய் வசூலிக்கப்பட்டதே அதிக பட்சமாக இருந்தது. இந்த சோதனைகளில் சிறப்பாக செயல்பட்ட வணிகவியல் பிரிவு ஊழியர்கள் பி. செல்வகுமார், பி. ராமச்சந்திரன், ஜே.மோகன்ராஜ் மற்றும் இதர வணிகவியல் பிரிவு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பாராட்டிய சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா இது போன்ற பயணச்சீட்டு சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு பயணச்சீட்டின்றி பயணிப்பதை குறைக்குமாறு அறிவுறுத்தினார்.
கடந்த வார இறுதியில் தொடர்ந்து 3 விடுமுறை நாட்கள் வருவதால் ரயில்களில் அதிக கூட்டம் இருப்பதால் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதை உத்தேசித்து சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஏ.விஜுவின் தலைமையில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் 41 ரயில்களில், 46 வணிகவியல் பிரிவு ஊழியர்கள், 11 ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் கொண்ட ஒரு குழு, 26.08,2017 நள்ளிரவு 12 மணி முதல் 27.08,2017 நள்ளிரவு 12 மணி வரை 24 மணிநேரத்திற்கு சிறப்பு பயணச்சீட்டு பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதில் 4,69,342 ரூபாய் பயணச்சீட்டு தொகை மற்றும் அபராதமாக 1089 பேர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது. இதுவே சேலம் கோட்டத்தில் ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட பயணச்சீட்டு சோதனையில் வசூலிக்கப்பட்ட அதிக பட்ச தொகையாகும். இதற்கு முன்னதாக 02.04.2017 அன்று நடத்தப்பட்ட இது போன்ற ஒரு சோதனையின் போது 3,37,595 ரூபாய் வசூலிக்கப்பட்டதே அதிக பட்சமாக இருந்தது. இந்த சோதனைகளில் சிறப்பாக செயல்பட்ட வணிகவியல் பிரிவு ஊழியர்கள் பி. செல்வகுமார், பி. ராமச்சந்திரன், ஜே.மோகன்ராஜ் மற்றும் இதர வணிகவியல் பிரிவு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பாராட்டிய சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா இது போன்ற பயணச்சீட்டு சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு பயணச்சீட்டின்றி பயணிப்பதை குறைக்குமாறு அறிவுறுத்தினார்.