சேலம் தெற்கு ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு பரிசோதனையில் ஒரே நாளில் அதிக தொகை வசூலித்து சாதனை

ரயில்பயணிகள் ரயில்பயணத்தின் போது தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதையும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்வதை தடுக்கவும், தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் திடீர் பயணச்சீட்டு பரிசோதனை போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. 

கடந்த வார இறுதியில் தொடர்ந்து 3 விடுமுறை நாட்கள் வருவதால் ரயில்களில் அதிக கூட்டம் இருப்பதால் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதை உத்தேசித்து சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஏ.விஜுவின் தலைமையில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் 41 ரயில்களில், 46 வணிகவியல் பிரிவு ஊழியர்கள், 11 ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் கொண்ட ஒரு குழு, 26.08,2017 நள்ளிரவு 12 மணி முதல் 27.08,2017 நள்ளிரவு 12 மணி வரை 24 மணிநேரத்திற்கு சிறப்பு பயணச்சீட்டு பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

இதில் 4,69,342 ரூபாய் பயணச்சீட்டு தொகை மற்றும் அபராதமாக 1089 பேர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது. இதுவே சேலம் கோட்டத்தில் ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட பயணச்சீட்டு சோதனையில் வசூலிக்கப்பட்ட அதிக பட்ச தொகையாகும். இதற்கு முன்னதாக 02.04.2017 அன்று நடத்தப்பட்ட இது போன்ற ஒரு சோதனையின் போது 3,37,595 ரூபாய் வசூலிக்கப்பட்டதே அதிக பட்சமாக இருந்தது. இந்த சோதனைகளில் சிறப்பாக செயல்பட்ட வணிகவியல் பிரிவு ஊழியர்கள் பி. செல்வகுமார், பி. ராமச்சந்திரன், ஜே.மோகன்ராஜ் மற்றும் இதர வணிகவியல் பிரிவு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பாராட்டிய சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா இது போன்ற பயணச்சீட்டு சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு பயணச்சீட்டின்றி பயணிப்பதை குறைக்குமாறு அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...