அதிமுக-வில் கட்சி பொறுப்புகளில் இருக்கும் அமைச்சர்களை அக்கட்சியின் துணை பொதுச் செயலாலராக நியமிக்கப்பட்டு தற்போது நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் அதிரடியாக நீக்கி வருகிறார்.
ஞாயிறன்று (ஆகஸ்ட் 27) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சரின் ஆதரவு அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோரை கட்சி பதவியில் இருந்து இன்று டி.டி.வி.தினகரன் நீக்கினார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டி.டி.வி.தினரனின் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் எஸ்.பி.வேலுமணி-யின் ஆதரவாளர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை குனியமுத்தூர் மற்றும் பூ மார்க்கெட் பகுதியில் திரண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி-யின் ஆதரவாளர்கள் டி.டி.வி.தினகரனின் கொடும்பாவியை எரித்தும், அவரது புகைப்படத்தை செருப்பால் அடித்தும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
ஞாயிறன்று (ஆகஸ்ட் 27) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சரின் ஆதரவு அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோரை கட்சி பதவியில் இருந்து இன்று டி.டி.வி.தினகரன் நீக்கினார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டி.டி.வி.தினரனின் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் எஸ்.பி.வேலுமணி-யின் ஆதரவாளர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை குனியமுத்தூர் மற்றும் பூ மார்க்கெட் பகுதியில் திரண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி-யின் ஆதரவாளர்கள் டி.டி.வி.தினகரனின் கொடும்பாவியை எரித்தும், அவரது புகைப்படத்தை செருப்பால் அடித்தும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.