கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரி மாநில அளவில் விளம்பரம் செய்யப்பட்டு, பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் 1ம் தேதியன்று நேர்காணல் நடத்தப்பட்டு ஆர்.சுகன்யா என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
இவருக்கு கடந்த 4ம் தேதியிட்ட பணி நியமன ஆணை வழங்கப்பட்டு ஆகஸ்ட் 11ம் தேதியன்று கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், முதன்மை செயல் அலுவலர் ஆர்.சுகன்யா, மேலாண்மை இயக்குநருக்கு முகவரியிட்ட கடிதத்தில், "தான் மேற்படி பதவிக்கு முழு தகுதியுடன் எவ்வித விதிமீறல்களும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டதாகவும், விரும்பத்தகாத விமர்சனங்கள் தொடர்ந்து வருவதால் மேற்கொண்டு இப்பணியில் தொடர விரும்பவில்லை எனவும் தனது பணி விலகலை ஏற்றுக்கொள்ளுமாறும்" தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, இவரது பணி விலகல் கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய முதன்மை செயல் அலுவலர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக கோவை மாநகராட்சி ஆணையரும், கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநனருமான க.விஜயகார்த்திகேயன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு கடந்த 4ம் தேதியிட்ட பணி நியமன ஆணை வழங்கப்பட்டு ஆகஸ்ட் 11ம் தேதியன்று கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், முதன்மை செயல் அலுவலர் ஆர்.சுகன்யா, மேலாண்மை இயக்குநருக்கு முகவரியிட்ட கடிதத்தில், "தான் மேற்படி பதவிக்கு முழு தகுதியுடன் எவ்வித விதிமீறல்களும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டதாகவும், விரும்பத்தகாத விமர்சனங்கள் தொடர்ந்து வருவதால் மேற்கொண்டு இப்பணியில் தொடர விரும்பவில்லை எனவும் தனது பணி விலகலை ஏற்றுக்கொள்ளுமாறும்" தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, இவரது பணி விலகல் கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய முதன்மை செயல் அலுவலர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக கோவை மாநகராட்சி ஆணையரும், கோவை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநனருமான க.விஜயகார்த்திகேயன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.