ஆதரவற்ற ஆயிரம் பேருக்கு உணவளித்த "புட் பேங்க்" தன்னார்வலர் அமைப்பு

கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புட் பேங்க் தன்னார்வ அமைப்பின் சார்பில் ஆதரவற்றோர், சாலையோரம் வசிக்கும் என ஆயிரம் நபர்களுக்கு இன்று வஉசி மைதானத்தில் மாபெரும் உணவு வழங்கும் திருவிழா நடைபெற்றது.



இதுகுறித்து "புட் பேங்க்" தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி பாலாஜி கூறுகையில், எங்களது இந்த புட் பேங்க் அமைப்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட்டு வருவதே இந்த அமைப்பு வெற்றிகரமாக செயல்படக் காரணம் ஆகும். ஒவ்வொருவரும் தங்களது பணியை சிறப்பான முறையில் செய்து வருகின்றனர்.



இந்த அமைப்பின் மூலமாக மனநலம் குன்றியோர், சாலையோரம் வசிப்போர், ஆதரவற்றோர் என்றுள்ள மக்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான முழு உதவிகளும் புட் பேங்க் அமைப்பினால் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, வஉசி மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு குறித்து கடந்த ஒரு வாரத்திற்குமுன்பே முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் மூலம் ஆதரவற்ற, மனநலம் குன்றிய நபர்களைக் கண்டறிந்த மக்கள் அவர்களை வஉசி மைதானத்தில் திரளச் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, அவர்களுக்கு இன்று வெஜ் பிரியானி, முட்டை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும், நாங்கள் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வரும் மக்களை புறக்கணிக்கிறோம். வேறு வழியின்றி, ஆதரவின்றி, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட மக்களுக்கு மட்டுமே சேவையாற்றி வருகிறோம்.



அதுமட்டுமின்றி, இவ்வாறான மக்களில் பெண்களும் அதிகளவில் உள்ளனர். அவர்கள், சாலையோரம் ஆதரவின்றியும் எவ்வித பாதுகாப்புமின்றியும் தவித்து வருகின்றனர். இதில் மனநலம் குன்றிய பெண்களும் அடங்கும். எனவே, அவர்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அரசுத் தரப்பில் கட்டப்பட்டுள்ள ஆதரவு இல்லங்களுக்கு பரிந்துரை செய்து வருகிறோம். மேலும், சிலரை அவர்களது குடும்பத்தினருடனும் இணைத்து வருகிறோம்.



சமீபத்தில், ஒரு நபர் ஆதரவின்றி சாலையில் பிச்சை எடுத்து சுற்றித்திரிந்து வந்தார். அவரை எங்களது குழுவினரால் மீட்டு பராமரித்து தற்போது, அவர் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது உணவை அவரின் சொந்த ஊதியத்தில் உண்டு மகிழ்ந்து வருகிறார். இவ்வாறான ஆதரவற்றோர்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதன் மூலம் புட் பேங்க் அமைப்பினர்களாகிய நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...