வால்பாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட்டில் ஒற்றை காட்டு யானை தாக்கி வேலுச்சாமி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் கடந்த ஒருவார காலமாக ஒற்றை காட்டு யானை மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.



இந்நிலையில் இன்று கருமலை எஸ்டேட் பகுதியில் நேற்றைய தினம் இறந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்காக அப்பகுதியில் உள்ள மயான பகுதிக்கு ஊர்பொதுமக்கள் அனைவரும் சென்றுள்ளனர். அப்பொழுது திடீரென்று அருகே உள்ள காட்டிற்குள் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென அனைவரையும் துரத்தியுள்ளது.

இதில் வேலுச்சாமி (62) என்பவரை தனது துதிக்கையால் இழுத்த யானை தொடர்ந்து அவரை மிதித்து கொன்றது. இதை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனிடையே, தகவலறிந்தும் சம்பவ இடத்திற்கு விரைந்து வராத வனத்துறையினரைக் கண்டித்து அப்பகுதியில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் நேரில் வரும்வரை உடலை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த விடமாட்டோம் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.



மேலும் உயிரை பலிகொண்ட காட்டு யானை அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒற்றை காட்டு யானையை உடனடியாக கும்கி யானை வரவழைத்து பிடிக்கவும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...