காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச்சென்ற வாலிபர் பலி : சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி உறவினர்கள் புகார்


திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்று காவல் துறையினர் தாக்கியதில் தினேஷ் என்ற கட்டுமான தொழிலாளி உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (20 ). இவர் திருப்பூர் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக தினேஷ் மற்றும் அவரது நண்பர் ஒருவரை திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வலிப்பு ஏற்பட்டதால் தினேஷ் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே சிகிச்சைக்காக தினேஷ் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

இந்த நிலையில், காவல்துறையினர் தாக்கியதால் தான் தினேஷ் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 



இதுகுறித்து தினேஷ்-ன் உறவினர் முத்து என்பவர் கூறுகையில், 'காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதில் கழுத்து எலும்பு உடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தினேஷ் உயிரிழந்துள்ளார். பின்னர் தான் அவர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தினேஷ்-ன் மெடிக்கல் ரிப்போர்ட்டை போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் காட்ட மறுக்கின்றனர்.

மேலும், தினேஷை தனியார் மருத்துவமனையில் உடனிருந்து கவனித்துவந்த தந்தை நாகராஜை உறவினர்களிடம் போலீசார் காட்ட மறுக்கின்றனர். 



எனவே, தினேஷ் மரணத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மிது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...