போத்தனூர் ரயில் நிலையத்தில் செயலி மூலம் செயல்படும் டேக்சி சேவை அறிமுகம்

கோவை வடக்கு மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களில் சேலம் மண்டலம், தெற்கு ரயில்வேத் துறையின் சார்பில் செயலி மூலம் செயல்படும் டாக்சி சேவை இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் போதிய வாகன சேவையின்றியும், அவ்வாறு கிடைக்கப்பெரும் டாக்சிகளிலும் அதிகப்படியான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் தெரிவித்து வந்தனர். அதனை போக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு டேக்சி சேவையினை பூர்த்திசெய்யும் வகையிலும் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் இன்று செயலி மூலம் செயல்படும் டாக்சி சேவை மையம் திறக்கப்பட்டது .



போத்தனூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரயில்நிலைய மேலாளர் ஜெயக்குமார் நாயர் பங்கேற்று மையத்தினை திறந்து வைத்தார். கோவை வடக்கு ரயில் நிலையத்தில் நடைபெற்ற செயலி அறிமுக விழாவில் அந்த ரயில் நிலைய மேலாளர் ரவீந்திரன் பங்கேற்று டேக்சி செயலிக்கான மையத்தினை திறந்து வைத்தார். இதில், கோ டேக்சி மற்றும் ரெட் டேக்சி நிறுவனம் இணைந்து செயல்படவுள்ளன.



மேற்குறிப்பிட் இரண்டு ரயில் நிலையங்களிலும் 850 கார்கள் செயல்படவுள்ள நிலையில், இதன் மூலம் ஆண்டுக்கு 16 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கார்களை நிறுத்துவதற்காக மட்டும் போத்தனூர் ரயில் நிலையத்தில் 480 சதுர மீ  இடமும், கோவை வடக்கு ரயில் நிலையத்தில் 400 சதுர மீ  இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் செயலியில் இடம்பெற்றுள்ள கார்கர் மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...