நாடு முழுவதும் கலைகட்டிய விநாயகர் சதுர்த்தி- கோவில்களில் சிறப்பு பூஜை

தேசிய அளவில் கொண்டாடப்படும் இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி இன்று சிறப்பான முறையில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கோவையில் விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு கோவில்களில் சிறப்புப் பூஜைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலை நிறுவப்பட்டு வழிபாடும் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, கோவையில் விநாயகருக்கு என பிரசிதிபெற்ற ஈச்சனாரி மற்றும் புளியகுளம் விநாயகர் கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி சிறப்பு தரிசனத்தை கண்டு வழிபட்டு வருகின்றனர். 



மேலும், விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவாக கருதப்படும் அரிசி மாவு மூலம் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளும், எருக்கம் பூவினாலான மாலையும் அணிவித்து கொண்டாடி வருகின்றனர்.



இதில் குறிப்பாக, வழக்கம்போல் இரசாயன பூச்சுக்களாலும், பிளாஸ்டிக் கலவையினாலும் செய்யப்பட்ட விநாயகர் சிலை அல்லாமல் இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளே கோவை மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன.



மேலும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு எதிர்ப்பின் வெற்றியைக் குறிக்கும் வகையில் 'ஜல்லிக்கட்டு விநாயகர்' சிலை தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.



விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினரால் பெரும்பாலான பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வரும் ஆகஸ்ட் 27 அன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்க திட்டமிடப்பட்டுள்ளன.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...