கோவை புரூக்ஃபீல்டு மாலில் பசுமை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

கோவை மாவட்டத்தின் மிகவும் பிரசிதிபெற்ற புரூக்ஃபீல்டு மாலில் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பசுமை விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலான விநாயகர் சிலை தயாரிக்கும் போட்டிகள் நடைபெற்றது.



இதில், 6 வயது முதல் 83 வயதுவரையுடையோர் மிகவும் ஆவலுடன் பங்கேற்று இயற்கையான முறையில் விநாயகர் சிலைகளைத் தயாரித்தனர். குறிப்பாக, நீர்நிலைகளைப் பாதிக்காத வகையில் இயற்கையான பொருட்களை கொண்டு விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.



பழங்கள், காய்கறிகள், கோதுமை மாவு, மஞ்சல், பேப்பர், இயற்கை நிறங்கள், களிமண் உள்ளிட்டவைகள் மூலம் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டன.



இதுகுறித்து புரூக்ஃபீல்ட்ஸ் மால் நிறுவனத்தின் மேலாளர் சுஜாதா கூறுகையில், "விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் எதிர்பார்த்ததை விட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். கடந்த 4-5 நாட்களுக்கு முன்புதான் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இன்று புரூக்ஃபீல்டு வளாகம் ஒரு திருவிழாக்கோளமாக காட்சியளிக்கிறது. கொஞ்சம் முன்பே இதுகுறித்தான அறிவிப்பை வெளியிட்டிருந்தால் மக்களின் பங்களிப்பு இன்னும் அதிகரித்திருக்கும் என நம்புகிறேன். இருப்பினும், நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இன்று ஏராளமான மக்கள் இப்போட்டியில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் மீதான மக்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார். 



இப்போட்டியில், மஞ்சல் மூலம் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை முதல்பரிசை வென்றது. இதில், இயற்கை மஞ்சல் பொடி மற்றும் கூடுதல் வண்ணங்களுக்கு பீட்ரூட் சாறு, கோத்தமல்லி சாறு, கண்களுக்கு மிளகு, சீரகம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியுள்ளதாக இதன் வடிவமைப்பாளர் தெரிவித்தார்.



களிமண் மூலம் பசுமை கணபதியினை உருவாக்கிய மற்றொரு பங்கேற்பாளர் கூறுகையில், 'தற்போது நாங்கள் உருவாக்கியுள்ள விநாயகர் சிலை முழுவதும் களிமண் கொண்டு வடிவமைக்கப்பட்டது ஆகும். இந்த முறை நமது பாரம்பரிய வழிமுறையாகும். மேலும், இதன் தயாரிப்பின் போது புங்கை, வேம்பு, பீபள் உள்ளிட்ட விதைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் இயற்கையினை பாதுகாக்கும் வகையில் இந்த விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார்.



மேலம், இந்நிகழ்வில் பங்கேற்ற பள்ளி சிறார்கள், கோதுமை மாவு மற்றும் களிமண்களைக் கொண்டும், காய்கறிகள், பழங்களைக் கொண்டும் நேர்த்தியாக விநாயர் உருவத்தினை வடிவமைத்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.



சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய செதுக்கப்பட்ட குடைமிளகாய்களால் செய்யப்பட்ட விளக்குகள் கண்டிப்பாக மதிப்புக்குரியவையாக காணப்பட்டன. மற்றும், ஒரு நேர்த்தியான தோற்றத்தை தோற்றுவித்த காகித சுருள்களால் செய்யப்பட்ட வண்ணமயமான விநாயகர் சிலை மறக்க முடியாத ஒன்றாகும்.



இயற்கையின் மீது நம்மக்கள் கொண்டுள்ள அன்பையும், அர்ப்பனிப்பையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இந்நிகழ்வின் இறுதியில் வெற்றிபெற்றோருக்கு பரிசுத் தொகையும், சான்றிதழும், இதில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...