கோவையில் கடந்த 2015-ம் ஆண்டு வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டு வெடிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் செங்காடு பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவரது மகன் ராஜேஷ்குமார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆவாரம்பாளையம் ராமகிருஷ்ணா மருத்துவமனை சந்திப்பு பகுதியில் 7 பேர் கொண்ட இளைஞர் கும்பலால் சரமாரியாக ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜேஷ்குமார் உயிரிழந்ததையடுத்து அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி அவரை தாக்கிய 7 பேரை பந்தையசாலை காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இது தொடர்பான வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது, வழக்கில் தொடர்புடைய பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஏழு பேரில் ராமகிருஷ்ணன், அஜித்குமார், கார்த்திக், சக்திவேல் மற்றும் அருண்பாண்டி உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டணை வழங்கி நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் செங்காடு பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவரது மகன் ராஜேஷ்குமார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆவாரம்பாளையம் ராமகிருஷ்ணா மருத்துவமனை சந்திப்பு பகுதியில் 7 பேர் கொண்ட இளைஞர் கும்பலால் சரமாரியாக ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜேஷ்குமார் உயிரிழந்ததையடுத்து அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி அவரை தாக்கிய 7 பேரை பந்தையசாலை காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இது தொடர்பான வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது, வழக்கில் தொடர்புடைய பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஏழு பேரில் ராமகிருஷ்ணன், அஜித்குமார், கார்த்திக், சக்திவேல் மற்றும் அருண்பாண்டி உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டணை வழங்கி நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.