உதகையில் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் காவலர் அணிவகுப்பு பேரணி

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் இன்று அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.



வரும் ஞாயிற்றுகிழமை உதகையில் ஸ்ரீவிநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலத்தில் ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோருடன் சுமார் 500 காவலர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

இந்த பேரணி அசம்பளி திரையங்கம் அருகில் தொடங்கி சேரிங்கிராஸ், காபி அவுஸ் சதுக்கம், மாரியம்மன் கோவில், மெயின் பஜார் வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இதேப்போல் காந்தல் பகுதியிலும் அணிவகுப்புப் பேரணி நடைபெற்றது.



நாளை (ஆகஸ்ட் 25) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரின் பல்வேறு இடங்களில் வழிபாட்டிற்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு உதகை காமராஜர் அணையில் கரைப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு பணியாகவே தற்போது காவல்துறையின் அணிவகுப்பு நடைபெற்றது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...