விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் இன்று அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

வரும் ஞாயிற்றுகிழமை உதகையில் ஸ்ரீவிநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலத்தில் ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோருடன் சுமார் 500 காவலர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி அசம்பளி திரையங்கம் அருகில் தொடங்கி சேரிங்கிராஸ், காபி அவுஸ் சதுக்கம், மாரியம்மன் கோவில், மெயின் பஜார் வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இதேப்போல் காந்தல் பகுதியிலும் அணிவகுப்புப் பேரணி நடைபெற்றது.

நாளை (ஆகஸ்ட் 25) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரின் பல்வேறு இடங்களில் வழிபாட்டிற்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு உதகை காமராஜர் அணையில் கரைப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு பணியாகவே தற்போது காவல்துறையின் அணிவகுப்பு நடைபெற்றது.

வரும் ஞாயிற்றுகிழமை உதகையில் ஸ்ரீவிநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலத்தில் ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோருடன் சுமார் 500 காவலர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி அசம்பளி திரையங்கம் அருகில் தொடங்கி சேரிங்கிராஸ், காபி அவுஸ் சதுக்கம், மாரியம்மன் கோவில், மெயின் பஜார் வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இதேப்போல் காந்தல் பகுதியிலும் அணிவகுப்புப் பேரணி நடைபெற்றது.

நாளை (ஆகஸ்ட் 25) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரின் பல்வேறு இடங்களில் வழிபாட்டிற்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு உதகை காமராஜர் அணையில் கரைப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு பணியாகவே தற்போது காவல்துறையின் அணிவகுப்பு நடைபெற்றது.