கோவையில் இந்து முன்னணி பிரமுகர் விஷமருந்தி தற்கொலை



கோவை போத்தனூரை அடுத்த மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (36). இந்து முன்னணி பிரமுகரான இவர் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி கழிவறையை சுத்தம்  செய்யும் ரசாயனத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து ரஞ்சித்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித்குமார் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

தற்கொலை செய்துகொண்ட ரஞ்சித்குமார், இந்து முன்னணியின் மாநகர செய்தித்தொடர்பாளர் சசிகுமார் கொலையின் போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஆனந்த குமாரின் சகோதரர் ஆவார். 

முன்னதாகவே, போலீசார் தன்னை சசிகுமார் கொலையில் சந்தேகிப்பதாக கூறி வயிற்றை கிழித்து தற்கொலைக்கு முயன்றார். 

மேலும், கோவை அரசு மருத்துவமனையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இந்த நிலையில், மூன்றாவது முறையாக தற்கொலை செய்ய முயற்சித்தபோது ரஞ்சித்குமார் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இச்சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.​ 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...