காரைக்கால் - பெங்களூரு பயணிகள் ரயில் விபத்தில் பயணிகள் உயிர்தப்பினர்

இன்று காலை 11.47 மணியளவில் விருத்தாசலம் சேலம் பயணிகள் ரயில் எண்.76850 ஆத்தூர் சின்னசேலம் இடையே ஆளியக்கமற்ற லெவல் கிராசிங்கை கடக்கும் போது, டிரெயிலர் கொண்ட ஒரு டிராக்டர் அவசரமாக லெவல் கிராசிங்கை கடக்க முற்பட்டு ரயிலின் பின்புறம் உள்ள எஞ்சின் பகுதியை சேதப்படுத்தியது. 



இதனால் அந்த டிராக்டரின் டிரெயிலர் தனியாக பிரிந்தது. டிராக்டர் ஓட்டி வந்தவர் தனது டிராக்டரை விரைவாக ஓட்டி சம்பவ இடத்தில் இருந்து அகன்று விட்டார். ரயிலின் இயக்குநர் டிராக்டர் ஓட்டி தனது காதில் மொபைல் போன் ஹெட்செட் போட்டுக் கொண்டு வந்ததால் ரயில் சத்தத்தை கவனிக்காமல் விரைவாக வந்து ரயிலில் மோதியதாக தெரிவித்துள்ளார்.  



மதியம் 01.05 மணிக்கு சேலத்தில் இருந்து மீட்புப்பணிகளுக்காக ஒரு ரயில் அனுப்பப்பட்டு அது தற்போது சேதமான ரயில் நிறுத்தப்பட்டுள்ள சின்னசேலம் ரயில்நிலையம் சென்றடைந்துள்ளது. திருச்சி பொன்மலை ரயில்பணிமனையில் இருந்து பொறியாளர்கள் சேதமான ரயிலை ஆய்வு செய்து வருகின்றனர். ஆராய்ந்து அதை அப்படியே எடுத்து வர முடியுமா அல்லது சேதமான பகுதியை நீக்கி விட்டு எடுத்து வர முடியுமா என்று முடிவு செய்வார்கள். 



இந்த விபத்தால், காரைக்கால் பெங்களூரு பயணிகள் ரயில் எண் 56513 சின்னசேலத்தில் நிறுத்தப்பட்டு தற்போது சுமார் 2 மணி நேரம் தாமதமாக சேலம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த விபத்தால் யாருக்கும் காயம் உயிரிழப்பு ஏதுமில்லை எதுவும் ஏற்படவில்லை. 

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...