கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி சி.இ.ஒ நியமனம் தொடர்பாக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்


கோவையை ஸ்மார்ட் சிட்டியாக்கும் திட்டத்திற்கும் அனுபவம் இல்லாத ஒருவரை முதன்மை செயல் அலுவலராக பணி நியமனம் செய்ததாக கூறி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கோவை மாநகரை ஸ்மார்ட் சிட்டியாக மத்திய அரசு அறிவித்த நிலையில் சுமார் 1500 கோடி மதிப்பிலான அத்திட்டத்திற்கு முதன்மை செயல் அலுவலராக சுகன்யா என்பரை நியமனம் செய்ததற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம். இதனை கண்டித்து தெற்கு தாலுகா அலுவலகம் முன்பாக பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எவ்வித முன் அனுபவம் இல்லாத சுகன்யா என்பவரை கோவை மாநகர ஸ்மார்ட் சிட்டி முதன்மை செயல் அலுவலராக நியமித்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பனர் கே.பி.ராஜூ என்பவரின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக சுகன்யாவை நியமித்துள்ளதாக புகார் தெரிவித்தார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரிந்துரைத்தின் பேரில் சி.இ.ஒ வாக நியமித்த மாநகராட்சி ஆணையர் விஜயகாத்திகேயன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். இத்துறையில் அனுபவம் மிக்க ஒருவரை தேர்வு செய்து பணி அமர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், சுகன்யா அப்பொருப்பில் இருந்து நீக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...