முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைய சசிகலா குடும்பத்தினரே காரணம் -சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி பேட்டி

கட்சியில் இருந்து ஒவ்வொருவாராக நீக்கி வரும் சசிகலா தரப்பு, உடனடியாக பொதுக் குழுவை கூட்டி பலத்தை நிரூபிக்க தயாரா என கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, எப்போது வேண்டுமானாலும் பொதுக் குழுவை கூட்ட தாங்கள் தயாராக இருப்பதாகவும் சவால் விடுத்துள்ளார். 

கோவை, விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது வீட்டில் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசிய அவர், தினகரனின் வற்புறுத்தல் காரணமாகவே 19 எம்.எல்.ஏக்கள் தமிழக ஆளுனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், தினகரன், திவகாரன் ஆகிய இருவருக்கும் தேவை ஆட்சி கலைப்பே என புகார் கூறினார். 

ஈ.பி.எஸ் - ஒ.பி.எஸ் பற்றி பேச நாஞ்சில் சம்பத்திற்கு தகுதியில்லை எனவும், எம்.பி வைத்தியலிங்கத்தை நீக்க சசிகலா யார் என கேள்வி எழுப்பினார். சசிகலா பேச்சை கேட்டு ஆட்சியை கலைத்ததால் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என கூறிய அவர், தினகரன், திவகாரன், சசிகலா குடும்பத்திற்கு இனி அதிமுகவில் இடம் கிடையாது என கூறினார். 

ஒரு கூட்டத்தில் பேச நாஞ்சில் சம்பத் 50 ஆயிரம் ரூபாய் பணம் வாங்குகிறார் எனவும், எங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை நாங்கள் பேசி கொள்வோம் என்றவர் இதில் நாஞ்சில் சம்பத் தலையிட கூடாது என எச்சரித்தார். 19 எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க முன்வர வேண்டும் எனவும், அவர்கள் கூறுவது போல முதல்வரை மாற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். 

ஆட்சியை கவிழ்த்துவிட்டு 19 எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதி பக்கம் போக முடியுமா எனவும், தங்கள் வீட்டிற்கே போக முடியாது என கூறியவர். கட்சியில் இருந்து ஒவ்வொருவாராக நீக்கி வரும் சசிகலா தரப்பு, உடனடியாக பொதுக் குழுவை கூட்டி பலத்தை நிரூபிக்க தயாரா என கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, எப்போது வேண்டுமானாலும் பொதுக் குழுவை கூட்ட தாங்கள் தயாராக இருப்பதாகவும் சவால் விடுத்தார். 

ஈ.பி.எஸ் அரசு ஊழல் ஆட்சி என ஒ.பி.எஸ் கூறியது குடும்பத்தில் அண்ணன், தம்பி சண்டை போல தவிர வேறு ஒன்றும் இல்லை எனவும், அதிமுகவில் நடைபெற்று வரும் டிராமாவிற்கு விரைவில் முற்றுபுள்ளி வைக்கப்படும் என கூறினார். 

தாறுமாறாக பேட்டி அளித்து வரும் புகழேந்தி, நாஞ்சில் சம்பத் இனி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார். முன்னாள், முதல்வர் ஜெயலலிதா விரைவாக மரணம் அடைய சசிகலா குடும்பத்தினரே காரணம் என புகார் தெரிவித்தார். 

தினகரன் தரப்பில் இருந்து தனக்கு தொடர்ந்து அழைப்பு வந்துக் கொண்டிருப்பதாகவும், அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை என்றவர். இ.பி.எஸ், ஒ.பி.எஸ் தலைமையில் பணி ஆற்றவே விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...