அக்காவிடம் பெற்ற பணத்தை திருப்பி தராமல் ஏமற்றிய தம்பிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாயை திருப்பித் தரக் கூறி கோவையில் நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
கோவை சவுரிபாளையம் ஜி.வி.ரெசிடன்சி பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி தனது தம்பி தாமோதரன் பணம் கேட்டதையடுத்து அவருக்கு 4 லட்ச ரூபாயை கடந்த 2014-ம் ஆண்டு கொடுத்துள்ளார். பின்னர் பணத்தை விஜயலட்சுமி திருப்பி கேட்டபோது தான் பணம் பெறவில்லை என தாமோதரன் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விஜலட்சுமி தனது தம்பி மீது சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து தாமோதரன் மற்றும் அவரது மனைவி சுந்தரமணி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று ஜெ.எம் 3 நீதிபதி வேலுசாமி தீர்ப்பு வழங்கினார். அதன்படி தாமோதரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாயை திருப்பி அளிக்க உத்தரவிட்டார்.
கோவை சவுரிபாளையம் ஜி.வி.ரெசிடன்சி பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி தனது தம்பி தாமோதரன் பணம் கேட்டதையடுத்து அவருக்கு 4 லட்ச ரூபாயை கடந்த 2014-ம் ஆண்டு கொடுத்துள்ளார். பின்னர் பணத்தை விஜயலட்சுமி திருப்பி கேட்டபோது தான் பணம் பெறவில்லை என தாமோதரன் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விஜலட்சுமி தனது தம்பி மீது சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து தாமோதரன் மற்றும் அவரது மனைவி சுந்தரமணி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று ஜெ.எம் 3 நீதிபதி வேலுசாமி தீர்ப்பு வழங்கினார். அதன்படி தாமோதரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாயை திருப்பி அளிக்க உத்தரவிட்டார்.