கோவை மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி உரம் வழங்க நடடிவக்கை எடுக்கப்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சியர்


கோவை மாவட்டத்தில் 139 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உர விற்பனை நிலையங்களுக்கு விற்பனை முனை இயந்திரங்கள் வழங்கப்பட்டதன் மூலம் கோவை மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி உரம் வழங்க நடடிவக்கை எடுக்கப்பட்டுள்ளது  என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உர விற்பனை நிலையங்களுக்கு விற்பனை முனை இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் 139 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உர விற்பனை நிலையங்களுக்கு வழங்கி தெரிவித்ததாவது:-

இந்திய அரசாங்கத்தின் வேளாண் துறை அமைச்சகம் நாடு முழுவதும் மானிய விலையில் விவசாயிகளுக்கு உரம் விற்பனையை முறைப்படுத்த விற்பனை முனை இயந்திரங்கள் உர தயாரிப்பாளர் மூலம் உர விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் ஸ்பிக் லிமிடெட் மூலம் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு 193 விற்பனை முனை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது கூட்டுறவு சங்கங்களுக்கு கிரிப்கோ உர நிறுவனம் மூலம் 139 விற்பனை முனை இயந்திரங்கள் வழங்கப்படுகின்றது.

இக்கருவி உபயோகத்தின் மூலம் மானிய உரமானது விவசாயிகளுக்கு சென்றடைந்த பின்பு உர உற்பத்தியாளர்களுக்கு மான்யம் சென்றடையும். இதன் மூலம் உர இருப்பு மற்றும் விநியோகம் எளிதாக கண்காணிக்க முடியும் என்றார். விவசாயிகள் உரம் வாங்கும் பொழுது ஆதார் எண் மற்றும் கைரேகை பதிவு செய்யப்படும் என்றார்.

மண்பரிசோதனை மற்றும் கிராம மண் தன்மைக்கேற்ப உரம் பரிந்துரைப்படி உரம் வாங்குவதால் உரத்தேவை அளவு குறைகிறது, விவசாயம் அல்லாத இதர பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது முற்றிலுமாக தவிர்க்கப்படும், விவசாயிகள் மண்பரிசோதனை முடிவின்படியோ அல்லது கிராம உர குறியீட்டின்படியோ உரங்களை வாங்க வழிவகை செய்கிறது, மத்திய அரசு உரங்களுக்கான நேரடி பயனீட்டு பரிமாற்றம் திட்டத்தை கொண்டு வந்து இருப்பதன்மூலம் உரப்பயன்பாடு முழுமையாக கண்காணிக்கப்படும். இத்திட்டத்தில் விவசாயிகள் எப்பொழுதும் போல் அதே மானிய விலையில் உரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

மின்னனு முனை இயந்திரம் கோவை மாவட்டத்தில் 139 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் உர இருப்பு மற்றும் விநியோகம் எளிதில் கண்காணிக்கபட்டு விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனை முனை இயந்திரத்தின் மூலம் உரம் விற்பவர் மற்றும் வாங்குபவர் பற்றிய முழுதகவல்கள் உறுதிப்படுத்தப்படும், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மட்டுமே விவசாயிகள் உரம் வாங்க முடியும் எனவும், இதன் மூலம் உர விற்பனையில் ஏற்படும் முறைகேடுகள் முற்றிலுமாக தவிர்க்கப்படுவதோடு விவசாயம் அல்லாமல் வேறு பயன்பாட்டிற்கு உரத்தை பயன்படுத்த முடியாது என்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவளார் பிரபு, இணை இயக்குநர் (வேளாண்மை) பெருமாள், துணை இயக்குநர் சாமுவேல் மோகன்ராஜ், உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) வசந்தரேகா, கிரிப்கோ நிறுவன துணை மேலாளர் முத்துராமலிங்கம் மற்றும் தீபக் உட்பட வேளாண்மை மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...