கோவையில், மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியில் நடை பயனம் சென்று கொண்டிருந்த கவுதாமினி (60) என்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் நகையை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இது குறித்து கவுதாமணி, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இது தொடர்பாக இருகூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் கார்த்தி என்கின்ற பங்க் கார்த்தி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மனோஜ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் இவ்விருவரும் சேர்ந்தே செயின் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இவர்கள் கோவை 7-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டி, இவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
கடந்த 2010-ம் ஆண்டு சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியில் நடை பயனம் சென்று கொண்டிருந்த கவுதாமினி (60) என்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் நகையை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இது குறித்து கவுதாமணி, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இது தொடர்பாக இருகூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் கார்த்தி என்கின்ற பங்க் கார்த்தி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மனோஜ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் இவ்விருவரும் சேர்ந்தே செயின் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இவர்கள் கோவை 7-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டி, இவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.