கோவையில் டெங்கு வேகமாகப் பரவி வருவதையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் கோவை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தும், கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு முயற்சிகளும் எடுத்து வருகிறது.

பருவமழைக் காலங்களில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் நோய்கள் பாதிப்பு வருவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை காலத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம், சுகாதாரம் உள்ளிட்ட அந்தந்த உள்ளாட்சித்துறை பணியாளர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கோவை மாவட்டத்தில் பரவலாக பெருகி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வார்டுக்கும், டெங்கு காய்ச்சல் வார்டுக்கும் நேரில் சென்று பார்வையிட்டார். உடன், அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.


பருவமழைக் காலங்களில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் நோய்கள் பாதிப்பு வருவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை காலத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம், சுகாதாரம் உள்ளிட்ட அந்தந்த உள்ளாட்சித்துறை பணியாளர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கோவை மாவட்டத்தில் பரவலாக பெருகி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வார்டுக்கும், டெங்கு காய்ச்சல் வார்டுக்கும் நேரில் சென்று பார்வையிட்டார். உடன், அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.
