மர்மமுறையில் மாணவர் உயிரிழப்பு : எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்

கோவை, சக்தி சாலையில் செயல்பட்டு வரும் எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர் கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாணவர் உயிரிழந்தது குறித்து கல்லூரி நிர்வாகம் இன்று வரை வெளியில் கூறாமல் இருந்ததையடுத்து இன்று காலை அக்கல்லூரியைச் சேர்ந்த சக மாணவர்கள் ஒன்றிணைந்து வகுப்பை புறக்கணித்து கல்லூரியின் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரசாந்த் என்னும் மாணவர் எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் துறையில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தீடீரென கல்லூரியின் விடுதியில் உயிரிழந்துள்ளார். ஆனால், பிரசாந்த் தற்கொலை செய்து உயிரிழக்கவில்லை என சக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, பிரசாந்த் உயிரிழப்பில் மர்மம் உள்ளதாகவும், இறந்து இரண்டு நாட்கள் கடந்தும் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை எனவும் கூறி அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் வகுப்பை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், கல்லூரி முதல்வர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் பேசுகையில், மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன், மாணவர் உயிரிழப்பில் உள்ள சந்தேகத்தை ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும் எனவும், காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு வகுப்பிற்குச் சென்றனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...