முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற நீதிபதிகள் அறிவுரை

முஸ்லீம் மதத்தினர்களிடையே, மூன்று முறை "தலாக்" சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால், குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாவதாகவும், இந்த நடைமுறைக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் 5 முஸ்லிம் பெண்கள் உள்பட 7 பேர் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மனுக்களை கடந்த மார்ச் 30ம் தேதியன்று தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு விசாரித்தது. கடந்த மே 18-ம் தேதி விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதிகள் நரிமன், உதய் லலித் மற்றும் குரியன் ஆகியோர் முத்தலாக் முறைக்கு எதிராக தீர்ப்பினை தெரிவித்தனர். முத்தலாக் முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறினர். 

நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் ஆகியோர் முத்தலாக்கிற்கு ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்தனர். கெஹர் கூறுகையில் அரசியலமைப்பு சட்டப்பிரிவுகளை முத்தலாக் மீறவில்லை என்று கூறினார். தொடர்ந்து, இஸ்லாமியருக்கு பிரச்சனை இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

இதனைத்தொடர்ந்து, மத்திய அரசு 6 மாதத்திற்குள் அவரச சட்ட திருத்தம் கொண்டு வந்து முத்தலாக் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அப்படி 6 மாதத்திற்கு சட்டம் இயற்றவில்லை என்றால் முத்தலாக் மீதான தடை நீடிக்கும். அரசியல் கட்சிகள் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை விட்டு மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதுகுறித்து நீதிபதிகளுள் ஒருவரான குரியன் கூறுகையில், ஷரியத் சட்டத்தை மீறும் வகையில் புனித குரானின் கொள்கைகளுக்கு முத்தலாக் எதிரானது. இஸ்லாமிய நடைமுறையுடன் முத்தலாக் ஒருங்கிணைந்த ஒன்று என்ற தலைமை நீதிபதியின் கருத்தை ஒப்புக் கொள்வது கடினம் என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...