புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள அவ்வமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருப்பதாகவும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். கோவையில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள அவ்வமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருப்பதாகவும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். கோவையில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.