அணிகள் இணைந்தாலும் பாஜக பிடியில்தான் அதிமுக இருக்கும் என விசிக தொல்.திருமாவளவன் பேட்டி

கட்சி நலன், ஆட்சி நலன் ஆகியவற்றை தாண்டி மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் பிடியில் இருந்து அதிமுக அணிகள் செயல்படுகிறது என கோவையில் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மத அடிப்படைவாத சக்திகளால் கோவை மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்க கோவை மக்கள் மேடை என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விமானம் மூலம் இன்று கோவை வந்தார். அப்போது, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

அதிமுக இரு அணிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்ததாக அறிவிகப்பட்டாலும், அதிமுக-வினரிடையே ஒற்றுமை, கட்டுக்கோப்பு இருக்கும் என தெரியவில்லை. அதிமுகவில் புதிய அணி உருவாகும் வாய்ப்பு உள்ளது. தமிழக அரசியலில் மீண்டும் குழப்பம் உருவாகும். அதிமுகவில் மீண்டும் இரு அணிகள் இருக்கும் என யூகிக்க முடிகிறது.

கட்சி நலன், ஆட்சி நலன் ஆகியவற்றை தாண்டி மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் பிடியில் இருந்து அதிமுக அணிகள் செயல்படுகின்றனர்.

இரு அணிகள் இணைப்பிற்கான நிபந்தனைகள் முன் கூட்டியே பேசப்பட்டிருக்கும். அதனால் அமைச்சரவை மாற்றம் உடனடியாக நடத்தப்படுகிறது.

ஆளும் கட்சியினர் தமிழக மக்களை இளிச்சவாயர்கள் ஆக்குகின்றனர் என்ற ரீதியில் நடிகர் கமல் டுவிட்டர் மூலம் கருத்து சொல்லி இருக்கின்றார் என புரிந்து கொள்ள முடிகின்றது, அது சரிதான்.

தற்போதைய சுழலில் தினகரன் தலைமையிலான குழுவினர் என்ன முடிவு எடுக்கின்றனர் என்பதை பொறுத்து அரசு நிலைக்குமா? அல்லது அதிரடி அரசியல் மாற்றம் நடக்குமா? என்பது தெரியவரும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா-வின் வேதா இல்லம் குறித்து உயில் எழுதி வைத்திருக்கின்றாரா என்பது தெரியவில்லை. உயில் எழுதவில்லை என்றால் வேதா இல்லத்தை அரசு உடமை ஆக்குவதில் தவறில்லை.

தமிழகத்தில் ஆட்சி கவிழாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பா.ஜ.க-விற்கு கொடுக்கப்பட்டு இருக்கும். ஆட்சி கவிழ்க்கப்பட்டாலும் அடுத்த தேர்தல் வரை கவர்னர் ஆட்சியை கொண்டு வரலாம். மேலும் தமிழருவி மணியனின் ஆருடங்கள் பலித்ததில்லை.

இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...