கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையான ஆர்தோ ஒன் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தான் தனது அண்ணன் மகன் உயிரிழந்துள்ளார் என நாமக்கல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.

நாமகிரிபேட்டை பச்சுடையான் பாளையத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் நாமக்கல் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் சுந்தரத்தின் உடன் பிறந்த சகோதரர் மகன் ஆவார். ரவிசந்திரன் உயிரிழப்பை அறிந்த எம்.பி.சுந்தரம் அதிமுக அணிகள் இணைப்பு விழா நிகழ்ச்சியிளை புறக்கணித்து கோவை வந்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், ரவிச்சந்திரன் கையில் அறுவை சிகிச்சைக்காக கோவை ஆர்த்தோ ஓன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுத்ததில் தவறு நிகழ்ந்து இருக்கின்றது. தவறான சிகிச்சை அளித்த ஆர்தோ ஒன் மருத்துவமனை மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி கோவை போலீஸ் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளோம்.
இவ்வாறு எம்.பி.சுந்தரம் தெரிவித்தார்.

நாமகிரிபேட்டை பச்சுடையான் பாளையத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் நாமக்கல் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் சுந்தரத்தின் உடன் பிறந்த சகோதரர் மகன் ஆவார். ரவிசந்திரன் உயிரிழப்பை அறிந்த எம்.பி.சுந்தரம் அதிமுக அணிகள் இணைப்பு விழா நிகழ்ச்சியிளை புறக்கணித்து கோவை வந்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், ரவிச்சந்திரன் கையில் அறுவை சிகிச்சைக்காக கோவை ஆர்த்தோ ஓன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுத்ததில் தவறு நிகழ்ந்து இருக்கின்றது. தவறான சிகிச்சை அளித்த ஆர்தோ ஒன் மருத்துவமனை மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி கோவை போலீஸ் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளோம்.
இவ்வாறு எம்.பி.சுந்தரம் தெரிவித்தார்.