மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தான் தனது அண்ணன் மகன் உயிரிழந்ததாக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் புகார்

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையான ஆர்தோ ஒன் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தான் தனது அண்ணன் மகன் உயிரிழந்துள்ளார் என நாமக்கல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.



நாமகிரிபேட்டை பச்சுடையான் பாளையத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் நாமக்கல் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் சுந்தரத்தின் உடன் பிறந்த சகோதரர் மகன் ஆவார். ரவிசந்திரன் உயிரிழப்பை அறிந்த எம்.பி.சுந்தரம் அதிமுக அணிகள் இணைப்பு விழா நிகழ்ச்சியிளை புறக்கணித்து கோவை வந்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், ரவிச்சந்திரன் கையில் அறுவை சிகிச்சைக்காக கோவை ஆர்த்தோ ஓன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுத்ததில் தவறு நிகழ்ந்து இருக்கின்றது. தவறான சிகிச்சை அளித்த ஆர்தோ ஒன் மருத்துவமனை மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி கோவை போலீஸ் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளோம்.

இவ்வாறு எம்.பி.சுந்தரம் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...